புரளி

பொய்யான வதந்தி ஒன்று பரவுகின்றது...!!

அஸ்ஸலாமு அலைக்கும்!

facebook மற்றும் whats app களில் ரமலான் மாதத்தை முன்வைத்து நோன்பாளிகள் ஸஹர் உணவின் போது தயிர் உடன் சேர்த்து ஏலக்காய் சாப்பிட்டால் நோன்பாளிகள் நோன்பு திறக்கும்வரை தாகத்தில் இருந்தும் தாங்கிக்கொள்ள முடியும் என்ற ஒரு பொய்யான தகவல் facebook மற்றும் whats app இன் மூலமாக அதி வேகமாக பரவி ஒருவருக்கொருவர் forward & share செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த செய்தி உங்களுக்கும் வந்து இருக்கலாம். அவற்றை நீங்களும் நம்பி உங்கள் குடும்பம் நண்பர்கள் என்று நீங்களும் அனுப்பி வைத்து இருப்பீர்கள். உண்மையென்ன என்று புரியாமல் சிந்திக்காமல்.

இது தான் உண்மை ;-

தயிர் உடலுக்கு குளிர் ( குளுமை )
ஏலக்காய் உடலுக்கு உஷ்ணம் ( சூடு )
தயிர் உடன் சேர்த்து ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

ஏலக்காய் உடம்புக்கு உஷ்ணம் தரக்கூடிய ஒன்று.இதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

தடுமல், சளி,  நீரிழிவு மூக்கில் இருந்து சளி இப்படியான வியாதிகள் உள்ளவர்கள் ஏலக்காய் டீ போட்டு குடித்தால் சளி நீங்கும்.உடல் குளிர் குறையும். உடல் நீர் தன்மையை கட்டுப்படுத்தும்.

நீங்கள் தயிர் உடன் ஏலக்காய் சாப்பிட்டால் உங்களுக்கு உடம்பில் குளிர் ஏற்படாது தாகம் தான் வரும்.

உங்களுக்கு இன்னும் சந்தேகம் என்றால் இப்பொழுதே நீங்கள் தயிர் உடன் ஏலக்காய் அல்லது டீ ( பிளைன் டீ ) ஒன்று ஏலக்காய் சேர்த்து குடித்து பாருங்கள். குடித்த சில நேரங்களிலேயே உங்களுக்கு தாகம் தான் எடுக்கும். தொண்டை காயும்.வறண்டது  போல் இருக்கும்.

எனவே கீழே உள்ள இந்த ஸ்க்ரீன் ஷாட்டில் உள்ள பதிவை நீங்கள் யாரும் நம்ப வேண்டாம்.
பொய்யான தகவல் ஒன்றை பரப்பியுள்ளார்கள்.

உங்களுக்கு எந்த பதிவு வந்தாலும் அதை முதலில் சிந்தித்துப் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த பதிவு முற்றிலும் பொய்யானது. நோன்பாளிகள் என்ற பெயரில் இப்படியான பதிவுகளை பதிய வைத்து நோன்பாளிகளை கஷ்டப்படுத்தி அல்லாஹ்வின் தண்டனையில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இந்த பதிவை யார் பதிந்தார் என்று  எனக்குத் தெரியாது. அவருக்கு சென்றடையும் வரை நீங்கள் உங்களால் முடிந்த அளவு ஷேர் செய்யுங்கள்.சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளட்டும்.

தொடர்ந்து தற்பொழுது ஏழு வருடங்களாக கோடை காலங்களிலே தான் ரமலான் மாதம் வந்து கொண்டிருக் கின்றது.எனவே ஸஹர் உணவில் தயிர் உட்கொள்ளுங்கள்.
ஸஹர் உணவுடன் சேர்த்து குளுமையான உணவை சேர்த்துக் கொள்ளுங்கள் வாழைப்பழம் நல்லது. எண்ணையில் பொறித்த உணவுவகைகளை ஸஹர் உணவின் போதும் இப்தாரின் போதும் தவிர்த்துக் கொள்ளுங்கள். கேஷ்டிக் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.கேஷ்டிக் இல்லாதவர்கள் கேஷ்டிக் வராமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இன்ஷாஅல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதத்தின் நோன்பை அல்லாஹ்வுக்கு பொருந்தியவாறு நோற்க அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக ஆமீன்.

இந்த பதிவு நன்கு ஆராய்ந்த பின்னரே பதிவு செய்து மக்களுக்கு உண்மையை தெளிவு படுத்துகின்றேன். உங்களால் முடிந்தவரை நீங்களும் தெரியப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment