புரளி

பொய்யான வதந்தி ஒன்று பரவுகின்றது...!!

அஸ்ஸலாமு அலைக்கும்!

facebook மற்றும் whats app களில் ரமலான் மாதத்தை முன்வைத்து நோன்பாளிகள் ஸஹர் உணவின் போது தயிர் உடன் சேர்த்து ஏலக்காய் சாப்பிட்டால் நோன்பாளிகள் நோன்பு திறக்கும்வரை தாகத்தில் இருந்தும் தாங்கிக்கொள்ள முடியும் என்ற ஒரு பொய்யான தகவல் facebook மற்றும் whats app இன் மூலமாக அதி வேகமாக பரவி ஒருவருக்கொருவர் forward & share செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த செய்தி உங்களுக்கும் வந்து இருக்கலாம். அவற்றை நீங்களும் நம்பி உங்கள் குடும்பம் நண்பர்கள் என்று நீங்களும் அனுப்பி வைத்து இருப்பீர்கள். உண்மையென்ன என்று புரியாமல் சிந்திக்காமல்.

இது தான் உண்மை ;-

தயிர் உடலுக்கு குளிர் ( குளுமை )
ஏலக்காய் உடலுக்கு உஷ்ணம் ( சூடு )
தயிர் உடன் சேர்த்து ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

ஏலக்காய் உடம்புக்கு உஷ்ணம் தரக்கூடிய ஒன்று.இதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

தடுமல், சளி,  நீரிழிவு மூக்கில் இருந்து சளி இப்படியான வியாதிகள் உள்ளவர்கள் ஏலக்காய் டீ போட்டு குடித்தால் சளி நீங்கும்.உடல் குளிர் குறையும். உடல் நீர் தன்மையை கட்டுப்படுத்தும்.

நீங்கள் தயிர் உடன் ஏலக்காய் சாப்பிட்டால் உங்களுக்கு உடம்பில் குளிர் ஏற்படாது தாகம் தான் வரும்.

உங்களுக்கு இன்னும் சந்தேகம் என்றால் இப்பொழுதே நீங்கள் தயிர் உடன் ஏலக்காய் அல்லது டீ ( பிளைன் டீ ) ஒன்று ஏலக்காய் சேர்த்து குடித்து பாருங்கள். குடித்த சில நேரங்களிலேயே உங்களுக்கு தாகம் தான் எடுக்கும். தொண்டை காயும்.வறண்டது  போல் இருக்கும்.

எனவே கீழே உள்ள இந்த ஸ்க்ரீன் ஷாட்டில் உள்ள பதிவை நீங்கள் யாரும் நம்ப வேண்டாம்.
பொய்யான தகவல் ஒன்றை பரப்பியுள்ளார்கள்.

உங்களுக்கு எந்த பதிவு வந்தாலும் அதை முதலில் சிந்தித்துப் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த பதிவு முற்றிலும் பொய்யானது. நோன்பாளிகள் என்ற பெயரில் இப்படியான பதிவுகளை பதிய வைத்து நோன்பாளிகளை கஷ்டப்படுத்தி அல்லாஹ்வின் தண்டனையில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இந்த பதிவை யார் பதிந்தார் என்று  எனக்குத் தெரியாது. அவருக்கு சென்றடையும் வரை நீங்கள் உங்களால் முடிந்த அளவு ஷேர் செய்யுங்கள்.சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளட்டும்.

தொடர்ந்து தற்பொழுது ஏழு வருடங்களாக கோடை காலங்களிலே தான் ரமலான் மாதம் வந்து கொண்டிருக் கின்றது.எனவே ஸஹர் உணவில் தயிர் உட்கொள்ளுங்கள்.
ஸஹர் உணவுடன் சேர்த்து குளுமையான உணவை சேர்த்துக் கொள்ளுங்கள் வாழைப்பழம் நல்லது. எண்ணையில் பொறித்த உணவுவகைகளை ஸஹர் உணவின் போதும் இப்தாரின் போதும் தவிர்த்துக் கொள்ளுங்கள். கேஷ்டிக் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.கேஷ்டிக் இல்லாதவர்கள் கேஷ்டிக் வராமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இன்ஷாஅல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதத்தின் நோன்பை அல்லாஹ்வுக்கு பொருந்தியவாறு நோற்க அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக ஆமீன்.

இந்த பதிவு நன்கு ஆராய்ந்த பின்னரே பதிவு செய்து மக்களுக்கு உண்மையை தெளிவு படுத்துகின்றேன். உங்களால் முடிந்தவரை நீங்களும் தெரியப்படுத்துங்கள்.

அதிரையில் அநியாயம் ! சுட சுட கேன்சர் விநியோகம் !! அரசு தடுக்குமா?

விருந்துக்கு வராத உறவினர்களுக்கு உணவு அனுப்ப பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி உணவுகளை சுடச்சுட அனுப்பும்போது அவர்களுடைய  வயிற்றுக்கு கேன்சரையும் சேர்த்து நாம் அனுப்புகிறோம் என்பதை எப்போது நாம் அறியப் போகிறோம்?
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுக்க நினைப்பவர்கள் அந்தப் பைகளின் உற்பத்தி நிலையங்களின் லைசென்சுகளை இரத்து செய்யாமல் விட்டு வைத்து இருப்பது ஏன் ? விஷம் வரும் வழியை அடைக்காமல் விஷ முறிவு ஊசி போடுவதால் பயன் உண்டா ?

சுத்தமும் சுகாதாரமும் அவரவர் வீடுகளில் பிறந்து வளர வேண்டிய செல்லக் குழந்தைகள். அவற்றை  அரசு மட்டும் வளர்த்துவிட இயலாது. பெற்ற பிள்ளைகளை  பேணி வளர்ப்பது போல் நாமும் சுயமாக முயற்சி செய்து வளர்க்க வேண்டும். ஹெல்த் இஸ் வெல்த் என்று சொல்வார்கள். “தூய்மை இறை வணக்கத்தில் பாதி   “ என்பது பெருமானார் ( ஸல்) அவர்கள் நவின்ற நபி மொழி . ‘சுத்தம் சோறு போடும்’ என்று ஆரம்பப் பள்ளிகளிலேயே படித்து இருக்கிறோம்.   ஆகவே ஆரோக்கியமான சுற்றுச் சூழல் மற்றும் தூய இந்தியாவை உருவாக்க ஒவ்வொருவரும் முயலவேண்டும். இதை அரசுதான் செய்யவேண்டுமென்று தனிமனிதன் எதிர்பார்ப்பது,  தனிமனிதனின் தன்மையை தானே கேவலப்படுத்திக் கொள்ளும் செயலாகும்.

கண்ட இடங்களில் ஒன்று மட்டும் இரண்டாம் இயற்கைக் கடமைகளை நிறைவேற்றுவது, வீட்டு ஜன்னலிலிருந்து எச்சில் துப்புவது, பஸ்களில் பயணிக்கும்போது பட்டாணிக்கடலை மற்றும் நிலக்கடலைகளைக் கொறித்துவிட்டு அவற்றின் தோல்களைக் காற்றில் பறக்கவிட்டு சக பயணிகளின் முகத்தில் விழவைப்பது, மூக்கை சிந்தி சுவர்களில் தேய்ப்பது , உணவுவிடுதிகளில் வாய் கொப்பளிக்கிறேன் என்று பெருங்குடலும் சிறுகுடலும் ஒன்றாக வெளியே வந்து விழும் அளவுக்கு காரிக் காரித்துப்புவது ஆகிய பழக்கங்களை, ‘ பாருக்குள்ளே நல்ல நாடு இந்த பாரத நாடு’  என்று பாடிக் கொண்டே செய்யலாமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

TO READ FULL ARTICLE

http://www.adirainews.net/2014/10/blog-post_722.html?showComment=1413608702224#c3677176025617438119

சிக்கிய ஜாகீர், சிதறிய ரயில்

'ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம்' என அறிக்கை விட்டுள்ளார் கலைஞர்.

ஜாகிர் உசேன் பாகிஸ்தான் உளவாளியா தீவிரவாதியா என்பதை யார் முடிவு செய்வது? காவல்துறை ஒருவரை கைது செய்வதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவர் தீவிரவாதிதான் என்ற முடிவுக்கு வரலாமா?
ஏற்கெனவே காவல்துறை அதிரை தமீம் அன்சாரியை தீவிரவாதி என்றுதான் கைது செய்தது. பின்னர் அவரை நீதிமன்றம் விடுவித்தது.

மதுரை பைப் வெடிகுண்டு வழக்கில் முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக்கி காவல்துறை கைது செய்தது. பின்னர் அது உளவுத்துறையின் சதி என அம்பலமானது.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலப்பாளையம் முஸ்லிம் இளைஞரை காவல்துறை கைது செய்தது. பின்னர் அவர் குற்றமற்றவராக வெளிவந்துள்ளார்.

அப்துல்நாசர் மதானி, குணங்குடி ஹனீபா, தடா ரஹீம், ஆயிஷா என எத்தனையோ பேரை அன்றைய தி.மு.க அரசின் காவல்துறை கைது செய்தது. பல ஆண்டுகள் சிறையில் வாடிய பின், அவர்களை நிரபராதிகள் என சொல்லி நீதிமன்றம் விடுவித்தது.

எனவே, காவல்துறை ஒருவரை தீவிரவாதி என சொல்வதும், ஊடகங்கள் அதைப் பரபரப்பாக்குவதும், பின்னர் நீதிமன்றம் அவர்களை விடுவிப்பதும் வாடிக்கையாகி வரும்போது, உண்மை நிலையை உணராமல் கலைஞர் இப்படி அவசர அறிக்கை விடலாமா?

ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம் என்பதைவிட, தயாநிதி மாறனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் 2ஜி யையே தவிர்த்திருக்கலாம் என்று சொல்வதே சரியானது.

சொல்வீர்களா?

ஆளூர் ஷாநவாஸ்

சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாக கலைஞர் வெளியிட்ட அறிக்கை குறித்து நான் எழுதிய மேற்கண்ட பதிவை பார்த்து தி.மு.க நண்பர்கள் பலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஜாகீர் உசேனை விசாரிக்க வேண்டும் என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது; அப்படியெனில் நீங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறீர்களா?' என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

கூடங்குளம் போராட்டக் குழுவினரை அந்நிய நாட்டின் கைக்கூலிகள் என அரசும் காவல்துறையும் ஊடகங்களும் சொன்னபோது அதைக் கடுமையாக எதிர்த்துள்ளேன். தலித் மக்களை சமூக விரோதிகளாக சித்தரித்து பா.ம.க.வினர் பரப்புரை செய்தபோதும் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளேன். அப்போதெல்லாம் சமூக ஆர்வலனாகத் தெரிந்த நான், இப்போது முஸ்லிம்களுக்காக பேசும்போது அடிப்படைவாதியாகத் தெரிவது ஏன்?

தீவிரவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை இங்கே எந்த முஸ்லிமும் ஆதரிப்பதில்லை. அவர்களுக்குச் சமூகத்தில் எந்த அங்கீகாரமும் தரப்படுவதில்லை. அல்-காய்தாவோ, அல்-உம்மாவோ எவரையும் முஸ்லிம்கள் நேசிப்பதில்லை. குற்றம் செய்தவர்கள் என்பது நிரூபிக்கப் பட்டால் அவர்களிடமிருந்து இறுதிவரை முஸ்லிம் சமூகம் விலகியே நிற்கிறது. ஆனால், முஸ்லிம்களின் இந்த அணுகுமுறை மற்றவர்களிடம் இருக்கிறதா?

கோவை குண்டுவெடிப்பில் குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களாக சிறையில் இருக்கும் முஸ்லிம்களுக்காக இங்குள்ள எந்த முஸ்லிம் அமைப்பாவது வாதிடுகிறதா? அவர்கள் குற்றமே செய்யவில்லை என்று சப்பைக் கட்டு கட்டுகிறதா? அவர்களின் படத்தைப் போட்டு தியாகிகளாகக் கொண்டாடுகிறதா? இல்லையே. ஆனால், காந்தியைக் கொன்ற கோட்சேயை இந்துத்துவவாதிகள் கதாநாயகனாகக் கொண்டாடுகிறார்களே. பாபர் மஸ்ஜிதை இடித்தப் பயங்கரவாதிகளை ‘கரசேவகர்கள்’ என்ற அடைமொழியுடன் அழைக்கிறார்களே. கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி என்று ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தால் குற்றம்சாட்டப்பட்ட பால்தாக்கரே மறைந்தபோது, உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டு தியாகி ஆக்கப்பட்டாரே. பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளியென லிபரகான் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்ட அத்வானி இன்றும் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறாரே. மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்ற பிறகும் மோடியால் பிரதமர் வேட்பாளர் ஆக முடிகிறதே. அவர்தான் இந்தியாவை மீட்க வந்த மீட்பர் என்று பலரால் வாதிட முடிகிறதே. இவையெல்லாம் ஒரு முஸ்லிம் குற்றவாளிக்கு இந்த மண்ணில் சாத்தியமா?

எனவே, முஸ்லிம் குற்றவாளியும், இந்துக் குற்றவாளியும் இங்கே ஒரே அளவுகோல் கொண்டு அளக்கப்படுவதில்லை எனும்போது, முஸ்லிம்கள் கொந்தளிப்பதில் என்ன பிழை இருக்க முடியும்?

குண்டுவெடிப்பு குறித்து கவர் ஸ்டோரி எழுதியிருக்கும் ஜூனியர் விகடன், 'சிக்கிய ஜாகீர், சிதறிய ரயில்' என்று தலைப்பிட்டுள்ளது. மோடியை பிரதமராக்கத் துடிக்கும் 'ஜூவி' அவ்வாறு எழுதியதில் எமக்கு வியப்போ, ஆத்திரமோ, வருத்தமோ துளியும் இல்லை. ஆனால், மோடி அல்லாத மதசார்பற்ற ஒருவர் பிரதமராக வேண்டும் என்று முழங்குகிற கலைஞர் அப்படி ஒரு அறிக்கை தந்ததே எமக்கு பெருத்த ஏமாற்றம்.
ஜாகிர் உசேன் குற்றவாளியா இல்லையா என்பதை நாம் முடிவு செய்ய முடியாது என்பதே என் வாதம். அவர் குற்றவாளி என்று நிரூபணமானால் அவருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டாலும் அதை நாம் கேள்வி எழுப்பப் போவதில்லை. ஆனால், கைது செய்யப்பட்ட அன்றே அவர் குறித்த அனைத்து தகவலையும் நம்பி ஒரு முடிவுக்கு வரலாமா என்பதே நம் கேள்வி.

ஏற்கெனவே, மதுரை பைப் வெடிகுண்டு வழக்கில் காவல்துறை சொன்னது பொய் என்று ஸ்டாலின் அவர்கள் அம்பலப்படுத்தி உள்ளார். இந்துத்துவ தலைவர்கள் படுகொலை வழக்குகளில் போலீஸ் பக்ருதீன் குழுவினரே குற்றவாளிகள் என காவல்துறை சொன்னதை கலைஞரே கேள்வி எழுப்பி உள்ளார். போலீஸ் பக்ருதீனை காவல்துறையும் ஊடகங்களும் தீவிரவாதி என சொல்லிக் கொண்டிருந்த போதுதான் கலைஞர், போலீஸ் பக்ருதீன் தரப்பு நியாயத்தை கேள்வியாக முன்வைத்தார். அப்படி கேள்வி எழுப்பியதற்காக கலைஞர் தீவீரவாத ஆதரவாளர் ஆகிவிடுவாரா?

இப்போது, ரயில் நிலைய குண்டு வெடிப்புக்கும் ஜாகீர் உசேனுக்கும் தொடர்பில்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாட்னாவில் மோடி கூட்டத்தில் வெடித்த அதே வகை குண்டுதான் இங்கும் வெடித்துள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. பாட்னா வெடிப்பில் இந்துத்துவ சக்திகளின் சதிவலையே அம்பலமானது. எனவே இதுவும் அதன் தொடர்ச்சிதான் எனும்போது சந்தேகம் யாரை நோக்கி வரவேண்டும்?

முஸ்லிம்கள் மீதான வெறுப்பை பற்றவைப்பதன் மூலம் முஸ்லிம் அல்லாத பெரும்பான்மை வாக்குகளை ஒருங்கிணைப்பதே மோடியின் திட்டம். அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் துணிந்துள்ளனர். எனவே, ஆந்திராவுக்கு மோடி வரும்போது, ஆந்திராவை கடந்துவரும் ரயிலில் குண்டு வெடிக்கிறது என்றால் சந்தேகம் முஸ்லிம் மீதா வரவேண்டும்? இந்த நேரத்தில் குண்டு வெடித்தால் அந்த லாபம் மோடிக்கா, முஸ்லிமுக்கா என்பதைக் கூடவா சிந்திக்கமாட்டீர்கள்?

குண்டுவெடிப்பு குறித்து கவர் ஸ்டோரி எழுதியிருக்கும் ஜூனியர் விகடன், 'சிக்கிய ஜாகீர், சிதறிய ரயில்' என்று தலைப்பிட்டுள்ளது. மோடியை பிரதமராக்கத் துடிக்கும் 'ஜூவி' அவ்வாறு எழுதியதில் எமக்கு வியப்போ, ஆத்திரமோ, வருத்தமோ துளியும் இல்லை. ஆனால், மோடி அல்லாத மதசார்பற்ற ஒருவர் பிரதமராக வேண்டும் என்று முழங்குகிற கலைஞர் அப்படி ஒரு அறிக்கை தந்ததே எமக்கு பெருத்த ஏமாற்றம்.

தி.மு.க நண்பர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

ஆளூர் ஷாநவாஸ்
http://www.satyamargam.com/news/news-and-views/2340-karunanidhi-to-politicise-chennai-blasts.html

மரண அறிவிப்பு

ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கும். கியாமத் நாளில் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
THE QURAN

WANTED freelance writers

WANTED freelance writers for peace train group of blogs.
Each article will be rewarded.The decision made to give rewards is absolutely for the reason to improve writing skills,improve general knowledge about Islam,culture,life,etc..
And,I want to spread Peace through blogging not hatred one,so kindly give your fingers and get rewards.We can make the earth,a peaceful one.Insha ALLAH.

 If interested please contact
at peacetrain114@gmail.com

http://peacetrain1.blogspot.com/
http://comparativestudy.blogspot.com/
http://penaamunai.blogspot.com/
http://manithaneyaexpress.blogspot.com/

அவனை பார்த்தியா?



'தொழுகை முடிக்கப்பட்டதும் அல்லாஹ்வின் அருளை பூமியில் அலைந்து தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! அல்-குர்ஆன் : 62:10 
 
 
 Smart work is better than Hard work. 
 
 
wow ..........



http://hajaashraf.blogspot.in/2013/11/1.html

அதிராம்பட்டினத்தில் PJ


எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில்- இது ஏனோ, எனது குடும்பத்து உறுப்பினர் நோய்வாய்ப்பட்டது போன்ற ஒரு சோகத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. காரணம், நான் மட்டுமல்ல... 'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும்மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!


நான் பிறந்த இடமான, பாபநாசம்-பண்டாரவாடையில், இமாம் அபூ ஹனிபா ரஹ் அவர்களை பழிக்கும் கொடியவராக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இவர். பின்னர், நான் படித்து வளர்ந்த இடமான, அதிராம்பட்டினத்தில்... இமாம் ஷாஃபி ரஹ் அவர்களை அவமானப்படுத்தும் இஸ்லாத்தின் வில்லனாக மீண்டும்  எனக்கு சொல்லப்பட்டவர் இவர். ஊருக்கு நாலு பேர், இப்படி 'நஜாத்துக்காரன்' என்று இருந்த அக்காலத்திய அவரின் ஆதராவளர்களை 'அஞ்சாம் மதஹப்'காரர்கள் என்று சொல்லி, பள்ளியின் வாசலில், 'நான்கு மதஹபுகளில் ஒருவரையாவது பின்பற்றாதவருக்கு இப்பள்ளியில் அனுமதி இல்லை' என்று பலகை மாட்டி... பள்ளியை விட்டு, தள்ளிவைத்து... இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாக எனக்கு காட்டப்பட்ட போது... அத்தோடு 'வேண்டாம்பா இந்த விரோதிகள் சகவாசம்' என்று மெய்யாலுமே மூடத்தனமாக நான் நம்பி... என்பதுகளின் இறுதியில் இவர்களை வெறுத்து ஒதுங்கி விட்டேன்.

ஆனால்.... அதே ஆண்டுகளில்... வெறும்  2 MP மட்டுமே வைத்து இருந்த பாஜக, பாபர் மஸ்ஜிதை இடிக்கும் ஓட்டுப்பொறுக்கி அஜன்டாவை கையில் எடுத்தவுடன்... 88 MPக்களுடன் ஆளுங்கட்சி கூட்டணி என்றாகி... மீண்டும் பாபர் மஸ்ஜித் இடிப்பு ரத யாத்திரை மூலம் 120 MP க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாகி... 'கரசேவை' என்ற சட்டத்துக்கு எதிரான மறைமுக பயங்கரவாதம் செய்து பாபர் மஸ்ஜிதை இடித்தனர். ஆனால், இதன் பிறகு... ராமர் கோவில் கட்டும் ஆர்வத்திலிருந்து அவர்களின் ஆதரவாளர்களை ஆட்சிக்கு வந்தவுடன் அதுபற்றி பார்ப்போம்... என்று திசை திருப்பி... ஹிந்துத்துவா வெறியூட்டப்பட்ட மக்களை தக்க வைப்பதற்கு பாஜக எடுத்த... அடுத்த அரசியல் ஓட்டுப்பொறுக்கி ஆயுதம் தான் 'பொது சிவில் சட்டம்'. இது எந்த அளவு முட்டாள்த்தனமானது என்று இப்போது எல்லாருக்கும் தெரியும். அப்போது, இதுபற்றி அந்த அளவு விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. மிகச்சிலருக்கே இருந்தது. அதனால்தான் அவர்களுக்கு 161 அப்புறம் 182 சீட் எல்லாம் வந்தது.

இந்நிலையில் ஒருநாள் (1993 /94 என்று நியாபகம்) அதிராம்பட்டினத்தில் ஒரு சம்பவம் நடந்தது. செக்கடிப்பள்ளி எதிரே வற்றி இருந்த செக்கடி குளத்திடலில் மவுலவி பீஜே வின் பொதுக்கூட்டம். மேடை லைட் எல்லாம் முதல் நாளே போட்டு விட்டார்கள். ஊர் முழுக்க போஸ்டர். 'PJ பேசுகிறார்' என்று. 'என்ன பேசுகிறார்... எதைப்பற்றி பேசுகிறார்' என்பதெல்லாம் யாருக்கு வேணும்...? 'அதெப்படி நம்ம எதிரி நம்ம இடத்துக்கு வந்து பேசலாம்...?' அவ்ளோதான் மேட்டர். விளைவு...? எல்லா போஸ்டரும் கிழிக்கப்பட்டது. அடுத்தநாள், காலையில்... பரபரப்பான தகவல் பஸ் ஸ்டாண்டில் நியூஸ் பேப்பர் வாங்கும்போது நண்பர்களால் பரிமாறப்பட்டது. அதாவது... PJ மீட்டிங்கிற்காக போடப்பட்டு இருந்த மேடை உடைக்கப்பட்டு... கீற்று பிய்த்து எறியப்பட்டு...  மைக் செட் லைட் எல்லாம் நொறுக்கப்பட்டு... சொற்பொழிவு இன்று நடத்த முடியாத அளவுக்கு ஆக்கப்பட்டு விட்டது என்ற நியூஸ்..!

'இந்த இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் பேச்சு காதில் விழாத பாதுகாப்பான(?) தூரத்தில்தான் இருக்கேன் நான்' என்ற நிம்மதியான எண்ணத்தில் இருந்த எனக்கு... வந்தே விட்டது அவரின் உரை எனது காதுக்குள்..! இது எப்படி..? ஆமாம்.! அந்த மீட்டிங் கேன்சல் ஆக வில்லை..! இடம் தான் கேன்சல் ஆகியது. எனவே, மீட்டிங் எங்கள் வீட்டு அருகே இருந்த 'சாரா கல்யாண மண்டபத்தில்' மாற்றப்பட்டு அங்கே நடந்தது.  நான் என்னதான் காதை பொத்திக்கொண்டு இருந்தாலும்... வீதி எங்கும் கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் மூலம் எனது செவிப்பறையை தட்டி எனது சிந்தைக்குள் சென்ற அவர் சொன்ன விஷயம் இதுதான்...........

"நான் என்ன, இவர்களை எதிர்த்தா பேச வந்துள்ளேன்..? நான் எதுக்கு இங்கே வந்து இருக்கேன்... எதைப்பற்றி பேச வந்து இருக்கேன்... இதுகூட தெரியாமல்... இப்படி மேடையை கலைத்து இடைஞ்சல் செய்தால் இதுக்கு என்ன அர்த்தம்..? நாளை பேப்பரில் நம்ம எதிரிகள்... என்ன எழுதுவாங்க தெரியுமா..? 'அதிராம்பட்டினத்தில் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பேச வந்தவரின் மேடை உடைத்து சட்டத்துக்கு தம் ஆதரவை தெரிவித்தனர்.' இப்படி ஒரு அவப்பெயர் உங்கள் ஊருக்கு தேவையா...? நமக்குள் இருக்கும் மார்க்கம்  பற்றிய வேறுபாட்டையா காரணமாக சொல்வார்கள்..? நான் என்ன சொல்றேன்னு புரியுதா..?" என்றார்.

அதுதான்... நான் அவர் விஷயத்தில் யோசிக்க ஆரம்பித்ததன் முதல் படி. அந்த பேச்சை முழுதாக செவி தாழ்த்தி சொற்பொழிவை கேட்க ஆரம்பித்தேன். 'அடடே... நல்லாத்தானே பேசுறார். நேர்மையான கேள்விகள்தானே இவை. எவ்ளோ பெரிய விஷயம் சொல்ல வந்து இருக்கார்..! ஒருவேளை மக்கள் இவர் மேலே சொல்றது தப்பா இருக்குமோ..? என்று நினைத்துக்கொண்டு... அத்தோடு அவரை மறந்தும் விட்டேன்..! காரணம், எனக்கு கொடுக்கப்பட்டு இருந்த ஆரம்பகால இன்புட் அவரை அந்நியராக்கி வைத்திருந்தது. ஆனால், இரண்டு நாள் கழித்து... அவர் சொன்ன மாதிரித்தான் தினமலரில் பெட்டி செய்தியாக ஓர் ஓரத்தில் வந்தது. "பொது சிவில் சட்டம் : அதிரை முஸ்லிம்கள் ஆதரவு". :-)

இதேகாலகட்டத்தில்... பல வருடங்களாக மத்ஹப் சட்டங்களை படித்து (ஃபிக்ஹின் கலைக்களஞ்சியம் : ஹனபி & ஷாபி) அதில் உள்ள குளறுபடிகளை கண்டு நெருடலாக இருந்து... 'ஒரே விஷயத்தில், ஹனபி ஒன்றாக ஷாபி வேறாக இருந்த மசாயில்களில் எது மார்க்க ரீதியில் நபி ஸல் அவர்களின் சரியான செயலாக இருக்கும்' என்று குழம்பி தத்தளித்துக்கொண்டு இருந்து... 'இரண்டுமே சரிதான் தம்பி' என்ற பதிலை இருவரிடமும் பெற்று... 'அப்படின்னா... இரண்டில் எது சிறந்ததோ அதை மட்டும் நான் எடுத்து இரண்டிலிருந்தும் மிக்ஸ் பண்ணி பின்பற்றலாமா' என்றாலும் கூடாதாம்... ஏதாவது ஒன்னை மட்டுமே பின்பற்றனுமாம்... இறுதியில்... அந்த மதஹப் சட்டங்களில் இது நிச்சயம் பிழையானவையாகத்தான் இருக்கும் என்று சுயமாக சிந்தித்து ஒவ்வொன்றாய் வெறுத்து... (உதாரணம்:- திருட செல்லுவதற்கு முன்னர் திருடன் ஓதவேண்டிய துவா) அடுத்து எப்படி, எந்தப்பக்கம் செல்வது, என்ன செய்வது, என்று குர்ஆன் தர்ஜுமாவை மட்டும் படித்துக்கொண்டு இருந்தபோதுதான்... 

தூத்துக்குடியில் நான் டிவி வாங்கிய பிறகு... (அதற்கு முன்னர் எங்கள் வீட்டில் டிவி இல்லை) ஒருநாள், விஜய் டிவியில் ஒருவரின் சொற்பொழிவை எதேச்சையாக 'பார்க்கும்' வாய்ப்பு ஏற்பட்டது. 'அடடே... எல்லாம் சரியா சொல்றாரே..! மத்ஹபில் தப்பா இருக்கும் இது... உண்மையில் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்று நாம் நினைச்ச படியே நம்ம மார்க்கத்திலும் முன்னமேயே இருக்கே...' என்று வியப்போடும் மனநிறைவுடனும் நன்றியுணர்வோடும் அவரைப்பார்த்துக்கொண்டு இருந்த போதுதான்... நண்பன் அதிரை ஹாரிஸ் சொன்னான்... 'இவர்தாண்டா அவர்' என்று..!

அதற்கு முன்னர் 13 வருடங்களாக அவரை பண்டாரவாடையில் 'ஜெய்லாவுதின்' என்றும், அதிரையில் 'PJ' என்றும் அறிந்திருந்த நான் அன்றுதான்... அவரை 'மவுலவி P.ஜைனுல்ஆபிதீன் உலவி' இவர்தானா என்று பரவசத்துடன் பார்த்தேன். அவரது ஆய்வுத்திறனும் அரபிப்புலமையும் பேச்சாற்றலும் அவர்மீது எனக்கு ஒருவித மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியது.  அதேநேரம், 'இவரையா இத்தனை காலம் நாம் நம்மைவிட்டு தள்ளி வைத்து நம்மை நாமே பாழ்படுத்திக்கொண்டோம்..?' என்று உள்ளுக்குள் துணுக்குற்றேன். இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக மத்ஹப் காரர்களின் பேச்சை கேட்காது இருந்து சுயமாக ஆராய வேண்டும் என்ற கொள்கையில் இருந்த நான்... 'இவரை மட்டும் சுயமாக ஆராயாமல்.. இவ்வளவு காலம் அவர்கள் பேச்சை கேட்டு எப்படி விலகி ஓடினேன்' என்று என்னை நானே அவமானத்தால் நொந்து கொண்டேன்.

சகோ.பிஜேவின் சொற்பொழிவுகள், ஆய்வுகள், கேள்வி- பதில்கள் போன்றவற்றை, 'இவர் ஒரு சிறந்த இமாம்' என்று நான் அறிந்த ஸ்பிக் நகர் பள்ளியின் சுன்னத் ஜமாஅத் மவுலவியிடம் சொல்லி விவாத்தித்த போது... 'மவுலவி பிஜே சொல்றதுதான் சரி' என்று ஏறக்குறைய எல்லா விஷயத்திலும் அவரை சப்போர்ட் பண்ணியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 

அப்படியாக, ஓரிரு வருடம் கழித்து, குடந்தை-மேலக்காவேரியில் ஒரு மேடை சொற்பொழிவில்... சகோ.மவுலவி பிஜே அவர்களை நேரில் சந்தித்து சலாம் சொல்லி அருகருகே மேலக்காவேரி பள்ளியில் இஷா தொழுத அன்று (2002) அவர் மூலமாக அல்லாஹ் தந்த உத்வேகம்தான் புஹாரி ஹதீஸ் ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் என்னை வாங்க வைத்தது. அன்று அவர் கூட்டத்தில், 'யார் யாரிடம் ஏதாவது ஒரு குர்ஆன் தர்ஜுமா உள்ளது , கைதூக்குங்கள்' என்றார். நான் உட்பட ஏராளமானோர் கை தூக்கினோம். 'மாஷாஅல்லாஹ்' என்றவர், 'வாங்காதவர்கள் யார் என்று கேட்டு இருக்கனுமோ' என்று கூறி விட்டு.. அடுத்து, 'இம்மாதம் வெளிவந்தபுகாரி ஏழாவது பாகம்  யாரிடம் உள்ளது..?' என்றார்..? எவரிடமும் இல்லை. 'சரி, மற்ற ஆறு பாகம் உள்ளவர்கள்..?' எவரிடமும் இல்லை. இப்படியே குறைத்து குறைத்து வந்து 'ஒரு பாகமாவது யாரிடம் உள்ளது..?' என கேட்க ஒரு சிலர் மட்டும் கை தூக்கினர். 

இந்த மாதிரியான மோசமான நிலையிலா நாம் இருக்கிறோம்... என்று அவருக்கு வந்த நியாமான வருத்தத்தில்... முன்வரிசையில் அமர்ந்து இருந்த நான் வெட்கி தலைகுனியும் அளவுக்கு அடுத்து அவரின் உரை என்னை மிகவும் பாதித்தது. ஆமாம்..! அவர் உரையின் படி...  நான் சினிமாவுக்கு செலவழித்துள்ளேன். காமிக்ஸ், நாவல், விகடன், குமுதம், தினதந்தி, தினமணி, தி ஹிந்து, எக்ஸ்ப்ரஸ்... என்று எதற்கெல்லாமோ... எவ்வளவோ செலவு செய்து உள்ளேனே..! அந்த பணத்தில் எழென்ன... எழுநூறு பாகம் நான் வாங்கி இருக்கலாமே..! ஏன் எனக்கு வாங்க மனம் வரவில்லை..? மறுமைக்காக வாழும் எண்ணம் எனக்கு இல்லையா..? மார்க்கத்தை அறியும் ஆவல் எனக்கு இல்லையா..? இதுபோல யாராவது வந்து எதயாவது மார்க்கம் என்று சொன்னால், 'சொல்பவர் சொல்வது சரியா' என்று எப்படி நான் உரசிப்பார்ப்பது..? 

அதே ஊட்டத்தில்... அடுத்த நாளே... குடந்தையில் அலைந்து புஹாரி கிடைக்காமல்... தஞ்சாவூர் ஹாஜியார் புக் டிப்போ சென்று ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் வாங்கி தூக்க முடியாமல் தூக்கி வந்தேன். அடுத்து, முஸ்லிம், திர்மிதி என்று என்னை சரியான பாதையில் இவரின் இந்த மனதை தொட்ட உரை மூலம் என்னை சரியான பாதையில் பயணிக்கவைத்த இறைவனுக்கே புகழனைத்தும்.
 .
மேலும்,  விஜய், விண், மூன் மீடியா சிடிக்கள், ஆன்லைன் பிஜே தளம், DAN தமிழ், இமயம் வாயிலாக... அவரால் நிறைய மார்க்க விஷயங்களில் நான் விளக்கம் பெற்றிருக்கிறேன். அதெல்லாம் நான் குழம்பி வேறு எப்பக்கம் செல்வது என்று முட்டு சந்தில் திக்கு முக்காடி திசை அறியாமல் நின்ற விஷயங்கள். அல்ஹம்துலில்லாஹ். எனக்கு பல விளக்கங்களை ஊட்டின அவரது உரைகளும் எழுத்துக்களும்.

அப்போதெல்லாம்... அவற்றில், அவர் அடிக்கடி சொல்லும் அறிவுரையில் எனக்கு மிகவும் பிடித்தது யாதெனில்... "நான் சொல்கிறேன் என்பதால்  அப்படியே நம்பி பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து சரிபார்த்து விட்டு விளங்கி பின்பற்றுங்கள்" என்பதே..! ஒருவர் மார்க்க விஷயத்தில் முனைந்து கஷ்டப்பட்டு பல நாட்கள் பல நூல்களை ஆய்வு செய்த பின்னரும், இப்படியும் சொல்ல ஒரு கர்வமற்ற மனப்பக்குவம் வேண்டுமே. மாஷாஅல்லாஹ்.

இப்படி, என்னைப்போல... எண்ணற்றோர் சரியான இஸ்லாமிய பாதையை தேர்ந்தெடுக்க அவர் ஒரு கருவியாக இருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகிற்கு, அவர் ஓர் இஸ்லாமிய சொத்து.

கடந்த 27 வருடங்களாக அவரின் இந்த அயராத மார்க்க உழைப்புக்கு உரிய நற்கூலியை வல்ல அல்லாஹ் அவருக்கு ஈருலகிலும் வழங்கி அவரை மகிழ்விக்கவும், அவரின் அளப்பரிய தொண்டுகள் மேலும் பலருக்கு சென்றடைந்து இன்னும் எண்ணற்றோர் பயன்பெறவும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயை அடியோடு முற்றிலுமாக நீக்கி அருளி, இன்னும் பல்லாண்டுகள் அவருக்கு நல்வாழ்வினை தந்து, மார்க்க பிரச்சார அழைப்பு பணியில் இன்னும் சிறப்பாக ஈடுபட அவருக்கு உடலளவிலும் & மன அளவிலும் பெரும் ஆரோக்கியமும் ஊக்கமும் தந்தருளவும்... அவரின் பாவங்களை மன்னிக்கவும், இருகரம் ஏந்தி வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். யா அல்லாஹ், எனது துவாவை ஏற்றுக்கொள்வாயாக..! ஆமீன்.

இளம் பிறை கண்டு ..


இளம் பிறை கண்டு ..
இளம்சிறார்கள்  ..
நாளை பெருநாள் .என்ற
நல்லதொரு சேதியை ...
நள்ளிரவு வரை
சொல்லித்திரிவர்..

எப்ப விடியும் பொழுது
என்று உறங்கும்
சிறார்க்கு தக்பீர் முழக்கம்
 தருமே மகிழ்வை ...

உறவு தரும் பெருநாள் காசு ..
நல்ல வரவு .என்று சொல்லும்
செல்லங்களின் உள்ளம் பொங்கும்
மகிழ்வால்..நாளும் ..
கூடுதல் சொந்தங்கள் ..
கூடுதல் வரவு ...
உறவுகள் தரும் காசு ..
 உள்ளத்தில் நீங்கும் மாசு ..
 
உற்றார் உறவினர் தந்த காசுக்கு  
உம்மாவும் கணக்கு கேட்பாள் ..
ஒன்றுக்கு 
இரண்டாக . காசுகளை கொடுத்து  
உறவை இரட்டிப்பாக்க...
சுவையான  
பெருநாள் பண்டங்களும்...
தமிழ் சொல்லுக்கு 
சுவையூட்டும்
வட்டிலாப்பம் ,
கடற்பாசி 
இடி யாப்பம்,
இறைச்சியானம் .
பொரிச்ச ரொட்டி என்ற சொல் 
நாவில் நீரூறும் ..
செவியில் தேனூறும் 

இவை யனைத்தும் ஒன்று கூடி 
பசியாறுதல் .என்றழைத்து 
தமிழ் தன்னை மகிழ்விக்கும் ..
பசியாறல் முடிந்து விட்டால் 
பகல் உணவு மறந்து போகும் 
பகலெல்லாம் பசித்திருந்த 
பழக்கமாக இருக்குமென்ற ஐயம் வேண்டாம் 
பசியாறா ..பக்குவமாய் நிறைந்ததனால் ...

இன்னும் ஒன்று சொல்ல வேண்டும் 
பழங்கால வளம் தன்னை
பதிவாளர் சொல்லுகையில் 
தொல்லை தரும் காகம் தனை
தன கால் சிலம்பால் கிழவி 
விரட்டிடுவாள் என்று ..

அது போல 
பெருநாள் தொழுகை முடித்து விட்டு 
வீதியிலே வரும்போது ..
மாமா ..பெருணா காசு என 
சிலர்  துரத்திடுவார் ..
ஐந்து,பத்து என  ரூபாய் நோட்டு தன்னை
கொடுத்து 
நடை பயில்வார்


உல்லாசம் பொங்கும்  
உவகை பொங்கும் பெரு நாளில் 
பள்ளிக்கு செல்லும் வழிஒன்று என்றால் 
திரும்பி வரும் வழி வேறாக 
இருக்க வேண்டும் .


மலக்குகளின் துஆக்கள்  கிட்டும்  
பெருநாளின் சுகம் தன்னை
சுபமாக பெற்றிடுங்கள் ....  

இறுதி வேதம் குரானையும்
இறுதி நபி போதனையும் 
இதயம் ஏந்தி 
செயல் படுவோம்
இன்ஷா அல்லாஹ்,
வெற்றியும் பெற்றிடுவோம்.

பாலஸ்தீனம் ,
காஷ்மீர்
பர்மா,
செச்சன்யா
சிரியா 
இன்னும் 
எங்கு நம் மக்கள் 
அத்துமீறலுக்கு ஆளாகி
வதைபடும் சோதனைக்கு
அல்லாஹ்விடம் கையேந்தி 
கண்கள் சொரிந்து
மன்றாடுவோம்
இந்நாளில்-
வல்லோனும் ஏற்றிடுவான்
நம் உம்மத்தின் வாழ்வில் 
விளக்கேற்றி வைத்திடுவான் 


அதிரை சித்திக் 

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்