ஆண்கள் குப்புறப் படுத்துத் தூங்கக் கூடாது என்றும் பெண்கள் நிமிர்ந்து படுத்துத் தூங்கக் கூடாது என்றும்கூறுகின்றார்களே! இதற்கு ஹதீஸ் ஆதாரம் உள்ளதா?
எம். அபூபக்ர், திருமங்கலக்குடி
நான் ஸஹர் நேரத்தில் மஸ்ஜிதில் குப்புறப்படுத்துக் கிடக்கும் போது, ஒருவர் காலால் என்னைஅசைத்து, இது அல்லாஹ்வை கோபம் கொள்ளச் செய்யும் படுக்கையாகும்” என்று கூறினார். நான்(விழித்துப்) பார்த்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: யயீஸ் பின் தஹ்ஃபா பின் கைஸ் அல்கிஃபாரி (ரலி)
நூல் : அபூதாவூத் (5040)
இந்த ஹதீஸின் அடிப்படையில் குப்புறப் படுப்பதற்குத் தடை உள்ளது. ஆனால் பெண்கள் நிமிர்ந்துபடுப்பதற்குத் தடை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் பொதுவாக நபி (ஸல்) அவர்கள்வலதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.
நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்துகொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர், யா அல்லாஹ்! நான்எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடத்தில் ஆதரவுவைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச்செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீஇறக்கிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன்’ என்றபிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆகி விடுகின்றாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப்பேச்சாக ஆக்கிக் கொள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பராஃ இப்னு ஆஸிப் (ரலி)
நூல் : புகாரி (247)
இந்த ஹதீஸின் அடிப்படையில் வலது புறமாக ஒருக்களித்துப் படுப்பது நபிவழி என்பதை அறியலாம்.இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதாகும்.
மருத்துவ சோதனை, மருத்துவரின் ஆலோசனை போன்ற காரணங்கள் இருந்தால் அல்லதுகுப்புறப்ப்டுக்கும் தேவை இருந்தால் அது இவர்களைக் கட்டுப்படுத்தாது.
மேலும் ஒருக்களித்து படுத்த பின் தூக்கத்தில் ஒருவர் இயல்பாக குப்புறப்படுத்தால் அதையும்கட்டுப்படுத்தாது.
சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று,
சரியாக தூங்காதவர்களே பிரச்சினைகளில் ஈடுபடுகிறார்கள்’ என்று கூறுகிறது. தூங்குவதனால் உடம்பில்ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். தூங்குவதற்கும் சில விதி முறைகள்இருக்கிறது.அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லவேண்டும். குறைந்தபட்சம் தினமும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். எப்போதும்,(சுபுஹு தொழுகையை தினமும் ஜாமாத்துடன் தொழ தவறிவிடாதீர்கள்) இரவில் மட்டுமே தூங்கவேண்டும்.
கவிழ்ந்து படுக்க கூடாது : கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால்,சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது.குப்புறப்படுக்கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.
|
மனிதநேய எக்ஸ்பிரஸ்
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். திருக்குர்ஆன் 4:48
குப்புறப் படுத்து தூங்கலாமா?
Labels:
குப்புறப் படுத்து தூங்கலாமா?
இஸ்லாமியர்களுக்கு இலவச ஐ ஏ எஸ் தேர்வு பயிற்சி வகுப்பு
Labels:
ஐ ஏ எஸ் தேர்வு
ஐ ஏ எஸ் தேர்வுக்கு தயாராகும் இஸ்லாமிய மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பை அழகிய கடன் ஐ ஏ எஸ் அகாதமி நடத்துகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் தங்குமிடம், உணவு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு சென்னை அண்ணா நகரில் உள்ள மனித நேயம் ஐ ஏ எஸ் பயிற்சி மையத்தில் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மேலும் விபரங்களுக்கு (0091)44-4214122 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பிரிட்டனை ஆளும் ஷரியத் சட்டங்கள்!
Labels:
பிரிட்டனை ஆளும் ஷரியத் சட்டங்கள்
இரு நாட்களுக்கு முன்பாக பிபிசி தமிழ் "பிரிட்டனில் ஷரியா சட்ட நீதிமுறை- பெட்டகம்" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த கட்டுரையில் பின்வருமாறு கூறுகின்றது..
பிரிட்டனில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குடும்பத் தகறாறுகள், பணக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபாரப் பிரச்சனைகளுடன் தொடர்புடைய வழக்குகளின்போது ஷரியா கவுன்சில்களூடாக தீர்வு பெற்றுக் கொள்கிறார்கள்.
பிரச்சனைகளை விரைவாகவும் சிக்கனமாகவும் தீர்த்துக்கொள்ள முடிவதால் முஸ்லிம்களுடனான வழக்குகளின் போது முஸ்லிம்கள் அல்லாதவர்களும் ஷரியா அமைப்புகளை பெருமளவில் நாடுவதாக கூறப்படுகின்றது.
தொடர்ந்து படிக்க... http:// suvanappiriyan.blogspot.com/ 2012/01/blog-post_20.html
பாபர் மசூதியை இடித்த இளைஞர்களுக்கு அல்லாஹ் கொடுத்த பரிசு
பாபர் மசூதியை இடித்த இளைஞர்களுக்கு அல்லாஹ் கொடுத்த பரிசு
பாபர் மசூதியை முதலில் இடித்த முன்னாள் பல்பீர் சிங், இந்நாள், சகோதரர். அமரின் முழு Interview இங்கே ..
மூச்சுத் திணற வைத்த விவாதம்
Labels:
மூச்சுத் திணற வைத்த விவாதம்
(பெண்களை ஒரு கட்டத்தில் பைபிளில் உள்ள “உன்னதப்பாட்டு”அதிகாரத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்ட போது அவர்கள் திக்கித் திணறி தலை குணிந்ததைப் பார்க்க முடிந்தது.)
கும்பகோணத்தில் சில பாதிரியார்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் சில மாதங்களுக்கு முன்பு விவாதம் நடந்தது நமக்கு நினைவிருக்கலாம். அந்த விவாதத்தில் பங்குகொண்ட நம் மக்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் விழி பிதுங்கினார் அந்தப் பாதிரியார்கள். வழக்கம் போல வல்ல இறைவன் அந்த விவாதத்திலும் நமக்கு வெற்றியையே தந்தான்.
அந்த விவாதங்கள் சீடியாக வெளியிடப்பட்டு மக்கள் கிருத்துவத்தின் பொய்மையை அறிந்து கொண்டனர். அது மட்டுமின்றி அந்த விவாதத்தின் விவரங்கள் உணர்வு வார இதழிலும் தொடராக வெளிவந்து பரபரப்பை உண்டாக்கியது. இந்தத் தொடரை நிறுத்தி விடுங்கள் என்றெல்லாம் சில பாதிரியார்கள் நம் சகோதரர்களிடம் கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் இந்த சீடியை முழுமையாகப் பார்த்த சில பாதிரியார்கள் நம் தலைமையகத்திற்குக் கடிதம் எழுதினார்கள்.
நீங்கள் வாயில்லாப் பிள்ளைப்பூச்சிகளிடம் விவாதம் செய்து விட்டு அதைப் பெருமையாக பீற்றிக் கொள்கிறீர்கள். ஆனால் அவர்கள் மவுனம் சாதித்த கேள்விகளுக்கு நாங்கள் அடுக்கடுக்காக ஆதாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கக் காத்திருக்கிறோம். 5 மற்றும் 6 ஆம் தேதி ஆகிய இரு நாட்களும் நாங்கள் விவாதிக்கத் தயார் என்றும் கடிதம் அனுப்பியிருந்தனர். அவர்களின் அழைப்பை அன்போடு ஏற்றுக் கொண்டு5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் விவாதம் நடத்த வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இது விவாதம் இரண்டு விதமாகப் பிரிக்கப்பட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் கிறித்தவர்களின் வேதம் குறித்து முஸ்லிம்கள் எந்தக் கேள்வியும் கேட்கலாம். அதற்கு கிறித்தவர்கள் பதிலளிக்க வேண்டும். இது இரண்டு நாட்கள் நடத்தப்பட வேண்டும்.அதன் பின்னர் முஸ்லிம்களின் வேதம் குறித்து கிறித்தவர்கள் எந்தக் கேள்வியும் கேட்கலாம். அதற்கு முஸ்லிம்கள் பதிலளிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்ட்து.
முதல் தலைப்பிலான விவாதம் இம்மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் நடத்துவது என்றும் ஆறாம் தேதி விவாத முடிவில் இரண்டாம் தலைப்புக்கான தேதியை முடிவு செய்வது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் விவாத அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இரு புறமும் தலா இருபது பேர் கலந்து கொள்ளும் அளவிற்கு இடவசதிகள் செய்யப்பட்டிருந்தன. சகோ.ஜெபக்குமார் தலைமையில் சகோ. சுதன்பாண்டியன்,சகோ.மதிவானன், சகோ.பன்னீர்செல்வம், சகோ.சுரேஷ் ஆகியோர் ஒரு குழுவாகவும், சகோ. கலீல் ரசூல் தலைமையில், சகோ. கோவை சகோ.ரஹ்மத்துல்லாஹ்,சகோ. சையது இப்ராஹீம்,சகோ.யூசுஃப்,சகோ. தாங்கல் ஹபிபுல்லா,சகோ. E. பாரூக் மற்றும் பலரும் கலந்து கொள்ள விவாதம் துவங்கியது.
விவாதத்தின் முதல் அமர்வில் பைபிளில் மனிதச் சரக்குகள் கலந்துள்ளது என்றும், பைபிள் 7 முறை புடம்போடப்பட்டும் இன்னும் தவறுகள் இருக்கின்றன என்றும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் நீக்கப்பட்டுள்ளது என்றும், அத்தோடு நாங்களும் நூற்றுக்கும் அதிகமான வசனங்களை நீக்கி விட்டோம் என்றும் போட்டு உடைத்தனர் கிருத்தவ விவாதக் குழுவினர். ஆரம்பமே அமர்க்களமாக துவங்கியதும் நம் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மூச்சுத் தினறினார்கள் பாதிரிமார்கள்.
பைபிளில் இருந்து இன்னும் கூட வசனங்கள் நீக்கப்படும் என பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர் விவாதத்தில் கலந்து கொண்டவர்கள். இப்படியாக போய்க் கொண்டிருந்த விவாதத்தில் சில வசனங்களுக்கு விளக்கம் கேட்க, அவர்கள் கொடுத்த சமாளிப்பு அனைவரையும் நகைப்புக்குள்ளாக்கியது. இறுதியில் பைபிளில் உள்ள ஆபாசங்களை நம் சகோதரர்கள் அள்ளிக் கொட்டிய போது அவர்களிடம் இருந்து பதில் என்ற பெயரில் வந்த விளக்கங்கள் பார்ப்பவர்களை திகைக்க வைத்தது.
பைபிள் வசனங்களைப் படித்துக் கொண்டிருந்த பெண்களை ஒரு கட்டத்தில் பைபிளில் உள்ள “உன்னதப்பாட்டு” அதிகாரத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்ட போது அவர்கள் திக்கித் திணறி தலை குணிந்ததைப் பார்க்க முடிந்தது. ஆபாசங்கள் நிறைந்த அத்தியாயங்களைப் படிக்கப் படிக்க அவர்கள் சார்பில் வந்திருந்த பெண்கள் நெளிய ஆரம்பித்தனர்.
பெண்களின் முன்னிலையில் படிக்க முடியாத இந்தப் புத்தகத்தை நீங்கள் எப்படி இறைவேதமாக நம்புகிறீர்கள் என்று நம் விவாதக் குழுவினர் கேட்ட போது அதற்குப் பதில் சொல்ல முடியாமல் சம்பந்தமே இல்லாதவற்றைப் பேசி காலத்தைக் கடத்தினர் கிருத்துவர்கள்.
நேரம் ஆக ஆக பதில் சொல்லமுடியாமல் இந்த விவாதத்திற்கான முடிவுகளும் மக்களின் கைகளிலேயே ஒப்படைக்கப்படுகின்றது. மனிதச் சரக்குகள் சங்கமித்திருக்கும் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் இறைவேதமாக நம்பும் மக்களை நோக்கி இறுதி ஏற்பாட்டு வேதக்காரர்கள் வைத்த ஒவ்வொறு வாதங்களும் அவர்களை மூச்சு தினறவைத்த காட்சிகளை கீழ்க்கண்ட வீடியோக்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
இப்படி விவாதம் போய்கொண்டிருன்ந்த போது ஒரு கட்டத்தில் இரண்டு நாட்கள் விவாதக்க ஒப்புக் கொண்டு வந்த கிறித்தவர்கள் ஒரு நாளிலேயே விவாத்ததை முடித்துக் கொள்வோம். அப்படித்தான் நாம் முடிவு செய்தோம் என்று பல்டி அடித்தனர்.
காலையில் விவாதம் துவங்கிய போது அவர்கள் சொன்ன ஒரு தகவலுக்கு நம் தரப்பில் ஆதாரம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நாளை விவாத்ததுக்கு வரும் போது கொண்டு வருகிறோம் என்று பதில் அளித்தனர். இது விவாத சீடியில் பதிவாகியுள்ளது. இதில் இருந்து அவர்கள் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டு தான் வந்தனர் என்பதை நீங்கள் அறியலாம். முதல் நாள் இறுதியில் பேசும் போது ஒரு நாள் விவாதம் என்று தான் பேசப்பட்டது என்றனர். மேலும் அடுத்த தலைப்புக்கான தேதி குறித்து பேசவும் அவர்கள் விரும்பவில்லை.
முதன் முதலில் கிறித்தவர்களின் பெந்த கொஸ்தே குரூப்பைச் சேர்ந்த ஜெபமணி என்பவருடன் நாம் விவாதம் நடத்தினோம்.கும்பகோனத்தில் ஆர்சி எனப்படும் கத்தோலிக்க பிரிவினருடன் விவாதம் நடத்தினோம்.ஜெரி தாமஸ் வகையறாக்கள் புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் இவர்கள் அனைவரையும் விட பைபிள் அறிவாளிகளாகவும் உருவ வழிபாட்டை எதிர்ப்பவர்களாகவும் தங்களை கூறிக் கொள்ளும் யஹோவா விட்னஸ் என்ற பிரிவினருடன் யாரும் விவாதிக்க முடியாது. அவர்கள் பைபிளைக் கரைத்து குடித்தவர்கள் என்ற கருத்து கிறித்தவ மக்களிடம் உள்ளது. இப்போது நாம் நடத்திய விவாதம் இந்த யஹோவா பிரிவினருடன் தான் .
இதன் மூலம் கிறித்தவர்களின் அனைத்து பிரிவினருடனும் தவ்ஹீத் ஜமாஅத் விவாதக் களம் கண்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ். நடந்து முடிந்த மூன்றிலும் அல்லாஹ் மாபெரும் வெற்றியை அளித்தான். இனி நடக்கவுள்ள விவாதங்களிலும் அல்லாஹ் வெற்றியை அளிப்பான். இன்ஷா அல்லாஹ்
இந்த விவாதத்திற்கான முடிவுகளும் மக்களின் கைகளிலேயே ஒப்படைக்கப்படுகின்றது. மனிதச் சரக்குகள் சங்கமித்திருக்கும் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் இறைவேதமாக நம்பும் மக்களை நோக்கி இறுதி ஏற்பாட்டு வேதக்காரர்கள் வைத்த ஒவ்வொறு வாதங்களும் அவர்களை மூச்சு தினறவைத்த காட்சிகளை கீழ்க்கண்ட வீடியோக்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
பாகம்:1
பாகம்:4
பாகம்:5
விக்கிப்பீடியா ஊடகப் போட்டி
Labels:
விக்கிப்பீடியா ஊடகப் போட்டி
தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இதில் பங்கேற்போர்தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள்,அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப்பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்கவேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள்.இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள்,மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல்பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவை தவிரதொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும்,தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர்சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.
போட்டி, நவம்பர் 15, 2011 முதல் பிப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில்பங்கேற்க விரும்புவோர் http://ta.wikipedia.org/wiki/
குறிப்பு:
1. பரிசுத்தொகை வெற்றிபெறுபவரின் நாட்டின் நாணய அலகுக்கு மாற்றப்படும்.
2. தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டிக்காக தமிழ் விக்கிப்பீடியாவில் வலைவாசல்ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.
அதற்கான இணைய முகவரி:http://tawp.in/r/2rbo
Best regards,
ASHRAF
சிறந்த குறும்படம்
Labels:
சிறந்த குறும்படம்
இறைதூதர்கள் வாழ்ந்த வரலாற்று தளங்களையும், குர்'ஆன்
கூறும் அத்தாட்சி இடங்களையும் நேரில் கண்டறிந்து அதன்
வரலாற்று பின்னணியை கூறும் சிறந்த குறும்படம்
யானைக்கால் நோயை குணப்படுத்த முடியுமா?
நிணநீர்த் தொகுதி என்றால் என்ன?
சரீரத்தின் பல பாகங்களுக்கும் இரத்தத்தை கொண்டு செல்லும் நாடி நாளங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். இவற்றின் சிலவற்றை உங்கள் கைகளில் கீழ்ப்புறத்தில் காணலாம். இதயமும் இரத்தக் குழாய்களும் குருதிச்சுற்றோட்டத்தின் பங்கை கொண்டுள்ளன. குருதிச் சுற்றோட்டத்தை விட நிணநீர் தொகுதி என்று ஒரு பகுதி உண்டு. இது நிணநீர் தொகுதியினுள் அசைந்து திரியும் நிணநீர் (Tissue fluid) இரத்தத்தோடு கலந்து கொள்கிறது. நிணநீர் முடிச்சுக்கள் என்பது ஒரு வீக்கம் அல்லது தடிப்பு. இப்படியான தடிப்பு உடலின் சிற்சில பாகங்களில் தோன்றுகிறது. அதாவது கழுத்து, அக்குள் (arm pit), அரைப்பூட்டு(groin) ஆகிய இடங்களில் உங்களுக்கு தொண்டைப்புண் (sorethroat) ஏற்படும் போது கழுத்துப்பாகத்தில் இவ்விதமான வீக்கம் இருப்பதை நீங்கள் அவதானித்து இருக்கக் கூடும்.
யானைக்கால் என்றால் என்ன?
சரீரத்திலே இருக்கும் ஒருவகை கிருமி ஆகும். இது நிணநீர் சுரப்பிகளையும் குழாய்களையும் தாக்குகிறது. இந்த நோய் வரக் காரணமாக இருக்கும் இக்கிருமி FILARIA என்றும் யானைக்கால் நோய் என்றும் அறியப்பட்டுள்ளது.
இது எதனால் ஏற்படுகிறது?
எப்படிப் பரவுகிறது என்பதை சிறிது பார்ப்போம் .யானைக்கால் நோய் ஒருவகை ஒட்டுண்ணிக் கிருமியினால் உண்டாகிறது. இது பல வகை நுளம்புகளினாலேயே பரவுகிறது. சில நுளம்புகள் இளம் கிருமியினாலே தொற்றுக்குட்பட்டு இருக்கும். இந்நுளம்புகள் எங்களுக்கு கடிக்கும் போது யானைக்கால் நோய்க்கிருமிகள் உடலினுள் செலுத்தப்படுகிறது. இந்தக் கிருமிகள் குறிப்பாக அரைப்பூட்டு நிணநீர் சுரப்பியினுள் செல்கிறது. இவை ஒன்பது மாதங்களுக்குள் முதிர்ச்சியடைந்து பின்பு பன்னிரண்டு வருடங்கள் வரை எமது உடலினுள் வாழக் கூடியதாக இருக்கிறது. இந்த முதிர்ந்த கிருமிகள் அனேகம் முதனிலை (larva) கிருமிகளை எமது இரத்தத்தில் சேர்க்கும். நுளம்புகள் எம்மை கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது இம் முதனிலை கிருமிகளும் இரத்தத்துடன் கடத்தப்பட்டு பின் வேறொருவரை கடிக்கும் பொழுது இந்த நோய் அவருக்கு உண்டாகிறது.
யானைக்கால் நோயை எப்படி இனம் கண்டு கொள்வீர்?
யானைக்கால் நோய் கிருமிகளை தங்கள் உடலினுள் கொண்டுள்ள அனேக மக்கள் நோய்வாய்ப்படுவதில்லை. அவர்கள் வாழ்நாள் முழுவதிலும் இந்நோய் வெளிக்காட்டப்படாமலே இருக்கலாம். ஆனால் ஒரு சிலரில் வெவ்வேறு வழிகளில் காணப்படும். ஆரம்பத்தில் நிணநீர் சரப்பிகளிலும் நிணநீர் குழாய்களில் நோவும் வீக்கமும் காணப்படுவதை நாம் அவதானிக்கலாம். ஆண்களுக்கு ஆண் விதையில் வீக்கம் ஏற்படும். நீண்ட நாட்களுக்கு கிருமிகள் அரைப்பு மூட்டுகளில் (groin) இருக்குமாயின் அவை நிணநீர் கால்வாய்களை செயலிழக்கப் பண்ணும். அப்படியான ஓர் நிலை ஏற்படும் போது கால்களில் வீக்கம் உண்டாகும். இந்நோயின் ஆரம்ப காலத்தில் உண்டாகும் இவ் வீக்கம் நிலையாக நில்லாது. ஆனால் நீண்ட காலத்திற்கு நீடித்து நிற்குமாயின் கால்களில் நிரந்தர வீக்கம் காணப்படும். சில வேளைகளில் பருத்த அசிங்கமான கால்களை உடையவர்களை யானைக்கால் நோயோடு சிலர் ஒப்பிடுவர். ஆனால் இவ்விதமான வீக்க நிலை ஒரு சிலரிலேயே காணப்படுகிறது.சிலருக்கு இக் கிருமிகள் ஒவ்வாமையை ஏற்படுத்துவதால் அவர்களுக்கு இருமல், தொய்வு போன்ற நோய்கள் உண்டாகிறது. இவர்களுடைய உமிழ்நீரில் சிலவேளை சிறிது இரத்தம் காணப்படவும் கூடும். இரத்தத்தில் சிறிது அதிகமான அமில கலங்கள் (eosinophils) இருப்பதே இதற்கு காரணமாகும். இந்த நிலை நுரையீரலை பாதிக்கும். றொப்பிக்கல் பள்மனறி இயோசினாபிலியா (tropical pulmonary eosinophilia)என்று அழைக்கப்படும்.
யானைக்கால் வியாதி (elephantiasis) என்றால் என்ன ?
பைலேரியா என்படும் ஒரு வகை ஒட்டுண்ணிப்புழு ஒருவருடைய உடலிலே விசேடமாக அழைப்பூட்டில் அநேக காலம் வாழ்ந்து அவருடைய உடலிலே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நிணநீர் குழாய்கள் அடைக்கப்படுவதனால் கால்களில் வீக்கம் உண்டாகிறது. ஆரம்பத்திலே இந்த வீக்கம் அதிக நாட்கள் தொடர்ந்து இருக்காது வற்றிப் போகும். எனவே குழாய்களின் வேலை தடைப்படுவது மட்டுமல்லாமல் இந்த நோயாளிகளுக்கு அந்தக் காலிலே வெவ்வேறு தொற்று நோய்களும் உண்டாகலாம். இதனால் மேலும் நிணநீர் குழாய்களும் அடைக்கப்படுகின்றன. அப்பொழுது இந்தக் கால் வீக்கம் நிரந்தரமாகவே ஏற்படுகிறது. மேலும் காலின் பளபளப்புக் குன்றி தோல் தடிப்பாக மாறிவிடுகிறது. இப்படி இருக்கும் ஒரு நோயாளியின் கால்கள் யானைக்காலை போன்று தோற்றம் அளிப்பதால் யானைக்கால் நோய் என்று கூறிக் கொள்கிறார்கள்0 .இந்த நோய் முழங்காலின் கீழ்ப்பகுதியிலே அதிகம் பாதித்து ஒரு காலிலோ அல்லது இரண்டு கால்களிலுமோ வரக்கூடும். சில சமயங்களில் அரைப்பூட்டையும் தாக்கக் கூடும். அதனால் கைகளை தாக்கும் சாத்தியம் இல்லை.
யாருக்கு யானைக்கால் நோய் உண்டாகிறது?
இலங்கையில் தென்மேற்குப் பகுதியில் புத்தளம் முதல் கதிர்காமம் வரையுள்ள கடற்கரையோரமுள்ள இடங்களில் வசிக்கும் மக்களிடையே இந்த நோய் அதிகமாக காணப்படுகிறது. இன்னும் நாட்டின் உட்பகுதியிலும் பொல்காவலை, வியாங்கொடை, பேலியகொடை, மகரகம ஆகிய இடங்களிலும் இந்நோய் காணப்படுகிறது. இந்த நோயைப்பரப்பும் நுளம்புகள் நாட்டின் எல்லாப் பகுதியிலும் பரவலாகக் காணப்படுவதால் விசேடமாக நாட்டின் கரையோரப் பருதிகளில் வாழும் மக்களின் உடலிலேயே இந்தப் பைலேரியா நோய்க் கிருமிகள் இருக்கின்றன. சில கணக்கெடுப்புக்களின் மூலம் ஓர் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களில் 3-8% வீதமானோர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியப்படுகிறது. இந்நோய் சிறுவர்கள், பிள்ளைகள், வாலிபர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள் எல்லோரையும் பாதிக்கின்றது. நாட்டின் குளிரான மத்திய மலைப் பிரதேசங்களில் இந்நோய் அதிகமாகவே காணப்படுகிறது.
யானைக்கால் நோயைக் கண்டுபிடிக்க என்ன ஆய்வுகூடச் சோதனைகள் உதவுகின்றன?
நோயாளியில் காணப்படும் அடையாளங்கள் அறிகுறிகளிலிருந்தே இந்நோய் அதிகமாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. WBC என்னும் இரத்தச் சோதனையைச் செய்து இயோசினோபிலியாவை கண்டுபிடிக்க முடியும் இரத்தத்தில் அதிகமாக இயோசினோபில்ஸ் என்னும் ஒருவகை குருதிக்கலங்கள் கூடுதலாகக் காணப்பட்டால் அவருக்கு யானைக்கால் நோய் உண்டு என்பதற்குச் சாதகம் அளிக்கிறது. இந்நோய்க்குக் காரணமாக இருக்கும் இளம் கிருமிகளை (Iarva)இரவு வேளைகளிலே இரத்தத்தில் இலகுவில் இனங்கண்டு கொள்ளலாம். ஆகவே யானைக்கால் நோயை அறிந்து கொள்வதற்கு இரத்தப் பரிசோதனை இரவு 8 அல்லது 10 மணுக்குப் பின்பே செய்யப்பட வேண்டும். சாயம் ஊட்டப்பட்ட குருதியை நுணுக்குக் காட்டியினூடாகப் பார்த்து யானைக்கால் நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த நோயின் விளைவாக குருதியில் உண்டாகும் பிறபொருளெதிரிகளும் அடையாளம் காண F.A.T எனும் ஆய்வுகூடப் பரிசோதனை செய்யப்படுகிறது. இச்சோதனையின் முடிவை நோயாளியின் குணங்குறிகளோடு ஒத்துப்பார்த்து கணிக்கவேண்டும். TPE என்ற நோய் இருப்பதாகச் சந்தேகம் ஏற்படின் நெஞ்சுக்கதிர் படம் X-ray எடுக்கவேண்டும்
யானைக்கால் நோயை குணப்படுத்த முடியுமா?
ஆம்
டையீத்தைல் காபமசிப்பீன் Diethylcarbamazine நோயைக் குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. நோயின் ஆரம்பத்திலே இது சிறந்த பலனைக் கொடுக்கிறது. இம்மருந்துச் சிகிச்சை 2 அல்லது 3 வாரங்களுக்குக் கொடுக்கப்டுகிறது. இந்நோய் மீண்டும் மீண்டும் வரக்கூடிய நோயாக இருப்பதனால் நோயாளிக்கு இந்தச் சிகிச்சை பல தடவைகள் கொடுக்கப்பட வேண்டும். நுளம்புகள் அடிக்கடி கடித்து மீண்டும் மீண்டும் நோய்த் தொற்று ஏற்படுவதாலும் பல தடவை சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகிறது. யானைக்கால் நோய் அறிகுறி உள்ளவர்களும் இரவில் செய்யப்படும் இரத்தப் பரிசோதனையில் கிருமி இருப்பவர்களும் திரும்பத் திரும்ப செய்யப்படும் சிகிச்சைகள் மூலம் நல்ல பலன் பெறுவர்.
நுளம்புகளை என்ன செய்யலாம்?
யானைக்கால் நோயைப் பரப்பும் பல இன நுளம்புகள் இலங்கையிலே உண்டு. இவை தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களிலே அதாவது சில்லுகள், தேங்காய், அல்லது இளநீர் சிரட்டைகள் போன்றவற்றில் தேங்கி நிற்கும். நீரிலும் பல்கிப் பெருகி விருத்தியடைகின்றன. இப்படியான பொருட்களை புதைத்து விடுவதனாலே நுளம்புகளின் விருத்தியைக் குறைக்கலாம்.
யானைக்கால் நோயைத் தடுக்க முடியுமா?
இலங்கையின் சில பகுதியிலே இந்த நோயாளர் அதிகமாக இருக்கிறார்கள். நுளம்புகளும் அதிகமாக உண்டு. நோய்க்காவியான நுளம்பு கடிப்பதனால் நோய் பரவுகிறது. ஒரு பகுதியில் மட்டும் இந்நோய் பரவிக் கொண்டு போனால் அதைத் தடுப்பது மிகவும் கஸ்டம். எனினும் நுளம்பு வில்லைகளையோ அல்லது நுளம்புக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ளக்கூடிய மருந்து வகைகளை பூசுவதனாலேயே இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். அவர்கள் யானைக்கால் நோய் உள்ள பிரதேசத்தில் சில நாட்களைக் களிக்க வேண்டி நேரிடின் சிகிச்சையை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து எடுப்பதன் மூலம் அவர்கள் இந்நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
யானைக்கால் நோயைத் தடுக்க என்ன செய்யலாம?
யானைக்கால் நோய்க் கிருமிகளை உடலிலே கொண்டுள்ள மக்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பிரதிபலிப்பைக் காட்டுகின்றனர். சிலரில் நோய் அறிகுறிகள் வெளிப்படாது. மற்றும் சிலரில் நோய்குரிய அறிகுறிகள் காணப்படும். வெவ்வேறு ஆட்களுக்கு வெவ்வேறு விதமாக இந் நோய் வெளிக்காட்டுவதன் காரணம் தெரியாது. எனினும் இந்நோய் உள்ளவர்களுக்கு அவர்களின் கால் யானையின் கால்களைப் போல் வராது தடுப்பதற்கு சில புத்திமதிகள் இங்கே குறிக்கப்பட்டுள்ளன.DEC சிகிச்சையை மீண்டும் மீண்டும் செய்தல் முதலில் கால் வீக்கம் உள்ளவர்கள் நோயை மேலும் வளரவிடாது தடுத்து அல்லது நோயின் தாக்கத்தைக் குறைப்பதன் மூலம் நிணநீர்க்குழாய்களில் அடைப்பு ஏற்படாதபடி தடுத்துக் கொள்ளலாம். இந்நோய் மீண்டும் மீண்டும் வரும் ஒரு நோயான படியால் மாதத்துக்கு ஒருமுறை தடுப்பு ஊசி ஆகிய பென்சிலின் மருந்தைக் கொடுக்க வேண்டுமென்று சிலர் அபிப்பிராயப்படுவர் . ஆகவே காலிலே எந்தவிதக் காயமும் ஏற்படாதும் சருமம், நகம் கால் விரல்கள் என்பனவற்றையும் பாதுகாத்துக் கொண்டால் யானைக்கால் நோய் ஏற்படுவதைத் தடுத்துக் கொள்ளலாம்.
நன்றி:பேராசிரியர் லால் ஜயக்கொடி
தொடர்பு
தொகுப்பாளர்கள்
PILL PROJECTC/o
மருந்தகவியல் திணைக்களம்
தபால்பெட்டி 271கின்ஸி வீதி
கொழும்பு 08
தொலைபேசி 2695230
பக்ஸ் 2689188
Subscribe to:
Posts (Atom)
