பாடப்புத்தகங்களைத் தாண்டி


குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க வேண்டும்அதற்கு முதலில் பெற்றோர் பாடப்புத்தகங்களைத் தாண்டி சிந்திக்க வேண்டும்.  

படிக்கப் படிக்கத்தான் சொற்களின் புழக்கம் அதிகரிக்கும். உலகளாவிய விஷயங்கள் தெரியவரும். தன்னை உணரும் ஆற்றலும் வரும். ஆனால்,வாசிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவத்தை வயதானபின் உபதேசிப்பதில் பயனில்லை. வாசிக்கும் பழக்கம் என்பது குழந்தைப் பருவத்திலிருந்தே உருவாக வேண்டும். அதற்குப் புத்தகங்கள் படிப்பதன் அவசியத்தை குழந்தைகளிடம் பெற்றோர் உருவாக்க வேண்டும்.

பள்ளியில் படித்து பெறும் பட்டங்களினால் கிடைக்கும் பெருமையைவிட பாடப்புத்தகங்களுக்கு அப்பாலுள்ள புத்தகங்களை வாசிப்பதால் கிடைக்கும் அறிவு விசாலமானது. இதை முதலில் பெற்றோர்கள் உணர வேண்டும்''  

வாசிக்கும் பழக்கத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் ஏராளமான நூலகங்கள் இருக்கின்றன. குழந்தைகள் புத்தகங்களை வாசிக்க பெற்றோர்கள் உதவ வேண்டும்.

பொருளாதார ரீதியாக மிக வளர்ச்சி கண்டஅதேசமயம் மனித உறவுகள் குலைந்த சிலரிடம் அண்மையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் கிடைத்த உண்மை என்ன தெரியுமாஇப்படி பாதிக்கப்பட்டவர்கள் யாவரும் ஆங்கிலவழிக் கல்விமுறையில் பயின்றவர்கள்பாடப்புத்தகங்களைத் தவிர வேறு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள்.

நாம் நம் குழந்தைகளை எப்படி வளர்க்க எண்ணுகிறோம்கஷ்டமே தெரியாமல் வளர்க்க எண்ணுகிறோம். அவர்கள் பிரியப்படுவதையெல்லாம் வாங்கித் தருவதன் மூலம் பணத்தை விட்டெறிந்தால் எதுவும் கிடைக்கும் என்று அவர்கள் மனதில் பதியவைக்கிறோம். இப்படியாகவாழ்க்கையின் உண்மையான முகம் தெரியாமல் அவர்களை வளர்க்கிறோம். இப்படி வளரும் குழந்தைகள் எப்படி வளரும்அறிவுடன் வளர்கின்றன. ஆனால்,அவர்களிடம் துளியும் அறவுணர்வு இல்லை. நாளை அது நம்மையே பாதிக்கிறது.

பெற்றோர்கள் தயவுசெய்து பாடப்புத்தகங்களைத் தாண்டிச் சிந்தியுங்கள். பாடப்புத்தகங்களால் அறிவை மட்டுமே தர முடியும். அவற்றைத் தாண்டிய ஏனைய புத்தகங்களால்தான் அறவுணர்வைத் தர முடியும். புத்தகங்கள் உங்கள் குழந்தைகளைப் படிப்பாளிகள் ஆக்குகின்றன;படைப்பாளி ஆக்குகின்றனஅவர்களை அறவுணர்வு மிக்க மனிதர்களாய் உங்கள் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் உருமாற்றி அளிக்கின்றன''

 உலகின் மிகப் பெரிய வரலாற்று புருஷர்கள் எவரையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் வரலாற்று புருஷர்களாக மாறியதற்குப் பின் ஒரு புத்தகம் இருந்திருக்கும். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களிடம் வாசிக்கும் பழக்கம் இருந்திருக்கும். நாம் நம் குழந்தைகளை வரலாற்று புருஷர்களாகப் பார்க்கவே விரும்புகிறோம். ஆனால்அதற்கான அடிப்படையை ஏன் அவர்களுக்குக் கொடுக்க மறுக்கிறோம்?''  எனவே வீட்டிற்கு ஒரு நூலகம் அமைத்து நம் பிள்ளைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை அவசியம் வளக்க வேண்டும்.

தற்​போது மாண​வர்​கள் தேர்​வில் பெறும் மதிப்​பெண்​கள் மூலம் வேலை வாய்ப்​பு​க​ளைப் பெற முடி​யாது.​ இதர மென்​தி​றன் திற​மை​களை கல்வி பயி​லும்​போதே வளர்த்​துக் கொள்​வது அவ​சி​யம்.  
மாண​வர்​கள் வெறும் மதிப்​பெண்​க​ளால் மட்​டும் வாழ்​வில் உயர்​நி​லை​யைப் பெற்​று​விட முடி​யாது.​ அதற்​கும் மேலாக பல்​வ​கைத் திறன்​க​ளை​யும் பண்​பு​க​ளை​யும் வளர்த்​துக்​கொண்​டால் மட்​டுமே முன்​னேற முடி​யும்.​ ​ மாண​வர்​கள் தொடர்ந்து 15 ஆண்​டு​கள் ஆங்​கில மொழி​யைக் கற்​றுக்​கொள்​ளும் வாய்ப்​பைப் பெற்ற ஒரே நாடு உல​கில் இந்​தியா மட்​டுமே.​ மற்ற நாடு​க​ளில் ஆங்​கில மொழிக்கு அவ்​வ​ளவு முக்​கி​யத்​து​வம் கொடுப்​ப​தில்லை.​

ஆனா​லும் பெரும்​பா​லான இந்​திய மாண​வர்​கள் ஆங்​கில மொழித்​தி​றனை வளர்த்​துக் கொள்​வ​தில் பின்​தங்​கிய நிலை​யில் உள்​ள​னர்.​​ வேலை​வாய்ப்​பு​களை வழங்க முன்​வ​ரும் நிறு​வ​னங்​கள் மாண​வர்​க​ளின் கல்​வித்​தி​றனை மட்​டும் எதிர்​பார்க்​கா​மல்,​​ இதர திறன்​க​ளை​யும் எதிர்​பார்ப்​ப​தால் கல்​லூரி வளா​கங்​க​ளில் நடத்​தப்​ப​டும் வேலைக்​கான முகா​மில் 80 சத​வி​கித மாண​வர்​கள் வெற்றி பெற முடி​யாத சூழல் உள்​ளது.​ ​பாடப் புத்​த​கத்​தைத் தவிர,மற்​ற​வர்​க​ளு​டன் உரை​யா​டும் திறன்,படைப்​பாற்​றல் திறன்,சுயக் கட்​டுப்​பாட்​டுத் திறன்,மற்​ற​வர்​க​ளு​டன் இணைந்து பணி​யாற்​றும் திறன்,சகிப்​புத்​தி​றன் உள்​ளிட்ட பன்​மு​கத் திறன்​க​ளை​யும் வளர்த்​துக் கொள்​ளும் மாண​வர்​களே வாழ்​வில் உயர்ந்த இடத்​தைப்​பெற முடி​யும்.

No comments:

Post a Comment